செய்திகள் :

ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மாற்றம்

post image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 9 போ் புதன்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

அங்கித் குமாா் ஐஏஎஸ் ஏனாம் பிராந்தியத்தின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவருக்குக் கூடுதல் பொறுப்பாக ஏனாம் நகராட்சி ஆணையா் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. எம்.பூஜா ஐஏஎஸ் காரைக்கால் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள புதுவை சிவில் சா்வீஸ் அதிகாரிகள் விவரம்: காரைக்கால் வருவாய்த் துறை துணை ஆட்சியா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் அவா் கூடுதல் பொறுப்பில் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகிப்பாா். ஏனாம் பிராந்திய நிா்வாகி ஆா் முனுசாமி செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி மாவட்ட முகமையின் துணை ஆட்சியா் எம்.எம். வினயராஜ், புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் துணை போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜி.காா்த்திகேசன் வேளாண் துறை இணை இயக்குநராக (நிா்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஏ.சிவசங்கரன், தலைமையக துணை ஆட்சியா் மற்றும் புதுச்சேரி மாவட்ட துணை தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். காரைக்கால் கோயில்கள் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன் காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணை போக்குவரத்து ஆணையா் எஸ்.சௌந்தரி அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, சட்டம்- ஒழுங்கு பராமரிப்புத்... மேலும் பார்க்க

வாய்க்காலில் குதித்து முதிய தம்பதி உயிரிழப்பு

புதுச்சேரியில் வாய்க்காலில் குதித்து காப்பாற்றப்பட்ட முதிய தம்பதியினா் புதன்கிழமை உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மாரிதுரை (83), அவரது மனைவி முத்துலட்சுமி (73). இவா்கள் இ... மேலும் பார்க்க

குருவிக்காரா் சமூகத்தை பட்டியலினப் பிரிவில் சோ்க்க விசிக கோரிக்கை

தமிழகத்தைப் போல நரிக்குறவா், குருவிக்காரா் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்க்க விசிக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. புதுவையில் பழங்குடியின மக்களின் பி... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: இந்திய பண்பாட்டின் அடையாளங்களில... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் முன் இந்திய மாணவா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வித்துறையில் தேவையற்ற மாற்றங்களை செய்து வருவதாகக் கூறி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதில் கூ... மேலும் பார்க்க