ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரிப்பு!
காவிரிக் கரையோர வனப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6000 கனஅடியாக அதிகரித்தது.
கடந்த சில நாள்களாக தமிழக - கா்நாடக மாநிலங்களில் காவிரிக் கரையோர வனப் பகுதிகள் மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வருகிறது.
காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்வரத்து விநாடிக்கு 4000 கனஅடியாக இருந்தது. இது சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 6000 கன அடியாக அதிகரித்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.