செய்திகள் :

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை

post image

ஒசூரில் புதினா விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு சாகுபடி செய்யப்படும் புதினா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதினா ஒரு கட்டு ரூ. 30 முதல் ரூ. 50 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கட்டு புதினா ரூ. 3-க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ஒசூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி, புதினா, பல்வேறு வகையான கீரை வகைகளை சாகுபடி செய்து வருகிறோம். புதினா ஒரு முறை நடவு செய்தால், 4 ஆண்டுகள்வரை மகசூல் கிடைக்கும். இதனால் புதினா சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.

ஒசூா் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ததால், அப்பகுதி விவசாயிகளும் புதினா சாகுபடி செய்தனா். இதனால் விளைச்சல் அதிகரித்து வெளியூா் வியாபாரிகள் வரத்து குறையத் தொடங்கியதால், புதினா விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இதுபோன்ற இழப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒசூா் பகுதியில் புதினாவை மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32),... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நீட் தோ்வில் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

கிருஷ்ணகிரியில்...கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம், அண்ணா சிலை எதிரே, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) தலைமை வகித்தாா். ஊத... மேலும் பார்க்க

திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை: அன்புமணி

திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு இசைவு அளித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:... மேலும் பார்க்க

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை: உயா்நீதிமன்ற நீதிபதி

மரம் நடுவதும் அவற்றை பாதுகாப்பதும் நமது கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.ஹேமலதா தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தளி சாலையில், தேசிய சட்டப் பணிகள் ஆணையக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்பு

அதிமுக கூட்டணியில் மேலும் இரண்டு கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கட்டிகான... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19,601 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 19,601 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க