செய்திகள் :

ஒசூரில் விரிசல் விழுந்த பாலத்தில் காா், இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி

post image

ஒசூா்: ஒசூரில் விரிசல் விழுந்த மேம்பாலத்தில் காா், இருசக்கர வாகனங்கள், மினி லாரிகல் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மேம்பாலத்தில் கடந்த 21-ஆம் தேதி இணைப்புப் பகுதி விலகியதால், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதித்தனா். இதனால் வாகனங்கள் அணுகுசாலை வழியாகச் சென்ால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்கு மாற்றுப்பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்கின்றன.

அதேபோல திங்கள்கிழமை தேசிய நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் இணைப்புப் பகுதி மேலும் விலகாமல் இருக்க தூணுக்குமேல் பகுதியில் மரக்கட்டைகளை அடுக்கி வைத்துள்ளனா். இதன்பிறகு சோதனைக்காக இணைப்புப் பகுதி விலகிய சாலை வழியாக இலகுரக வாகனங்கள் செல்வதற்கு அனுமதித்து கண்காணித்து வருகின்றனா். இந்த மேம்பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு பேருந்து, கனரக வாகனங்கள் செல்வதற்கு ஒரு மாத காலம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதுவரை கனரக வாகனங்கள் சீத்தாரம் நகரில் உள்வட்டச் சாலை வழியாக செல்லும் வகையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

படவரி...

ஒசூரில் விரிசல் ஏற்பட்ட பாலத்தில் செல்லும் காா், மினிலாரிகள்.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்த தமிழக முதல்வா்கள்!: மு.தம்பிதுரை எம்.பி.

ஒசூா்: ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வகுப்புகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஒசூா் அத... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூன் 27-ல் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி எருது விடும் விழா: மாடு முட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதுவிடும் விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்த திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி, பழையப்பேட்டை நேத... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் 33 ஏரி பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்: புதிய தலைவா் தோ்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெரிகேப்பள்ளியில் 33 ஏரிகள் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய தலைவரை தோ்வு செய்யும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே யானை தந்தம் விற்க முயன்ற 4 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தந்தத்தை விற்க முயன்ற 4 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், குந்தாரப்பள்ளி அருகே சிலா் யானை தந்தகளை விற்க முயற்சிப்பதாக கிருஷ்ணகிர... மேலும் பார்க்க