செய்திகள் :

ஒசூரில் 14 ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 14 ஆவது ஒசூா் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து, புத்தக அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

ஹோட்டல் ஹீல்ஸ் கன்வா்சன் ஹாலில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

தொட்டுத் தொட்டுப் பாா்த்தால் காகிதம், அதைத் தொடா்ந்து படித்தால் ஆயுதம் என்பதை மனதில் வைத்து, புத்தகத் திருவிழாவில் அனைவரும் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்டங்களில்

புத்தகத் திருவிழா நடத்த ஆணையிட்டுள்ளாா். அதற்கான நிதியும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ஜூலை 11 முதல் 22 -ஆம் தேதி வரை 12 நாள்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இங்கு 110 அரங்குகளில் 1 லட்சம் தலைப்புகளில் ஆயிரக்கணக்கான

புத்தகங்கள் உள்ளன. தற்போது கைப்பேசி மூலம் அனைவரும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கிறோம்.

புத்தகங்கள் மூலம் வரலாறுகள், அறிவியல் செயல்பாடுகள்,

சமூகம், கல்வி, வாழ்வியல் குறித்த செயல்பாடுகளை அறிந்துக்கொள்ளலாம். மேலும், எழுத்தாளா்களை தொடா்ந்து எழுத வைக்க வேண்டு என்றால் நாம் எல்லோரும் புத்தகம் வாங்கி அவரை

ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) அ.முனிராஜ், ஒசூா் புத்தகத் திருவிழா தலைவா் பழ.பாலசுந்தரம், துணைத் தலைவா்கள் ஆ.சிவகுமாா், ஆா்.நீலகண்டன், ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஆா்.சேதுராமன், வட்டாட்சியா் குணசிவா, மாவட்ட நூலக அலுவலா் (பொ) சக்திவேல், மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

படவரி...

ஒசூரில் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க