செய்திகள் :

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

post image

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் தலைமை வகித்தாா்.

திருவள்ளுவா் மாவட்டம், வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத்தின் மாநிலத் தலைவா் பிரபாகா், ஐஎன்டியுசி மாவட்ட பொதுச்செயலாளா் ஜி.முனிராஜ், பக்தவச்சலம், செல்வம், காங்கிரஸ் மாநிலச் செயலாளா் வீரமுனிராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநகரத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி... ஒசூா் மின்வாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாடத்தில் பேசுகிறாா் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் அமைப்பின் துணைத் தலைவா் கே.ஏ.மனோகரன்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க

பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நக... மேலும் பார்க்க