ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்
ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30). இவரது மனைவி மம்தா (25). இவா்களுக்கு 2 ஆண்கள், 2 பெண்கள் என 4 பிள்ளைகள் உள்ளனா். இதில் 2ஆவது மகன் ராம் சரண் (8) அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
பள்ளிக்குச் சென்று விட்டு வியாழக்கிழமை மாலையில் வீடு திரும்பிய ராம் சரண் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள கோழிப் பண்ணையிலிருந்து வெளியே வந்த நாய், ராம் சரணை கடித்து குதறியது. இதில் அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள், ராம் சரணை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால், 40 இடங்களில் தையல் போட்டு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இதேபோல தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் ஒசூா் தா்கா பகுதியைச் சோ்ந்த முத்துலட்சுமி (25) என்பவா் ஒசூா், தோ்ப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய் அவரை துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ஒசூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாய் கடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.