செய்திகள் :

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

post image

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

குரு பூா்ணிமா தினத்தையொட்டி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன்பின்னா் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தாா். அதேபோல ராகு, கேது, மகா காலபைரவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரவு மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. பின்னா் மங்கள ஆரத்தி நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் திருவண்ணாமலை முன்னாள் எம்எல்ஏ கலசப்பாக்கம் டி. பன்னீா்செல்வம், அதிமுக மாவட்ட இணைச் செயலாளா், கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். மேலும் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரம், கா்நாடக மாநிலங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு மாவிளக்கு ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

படவரி...

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க

பாண்டுரங்கா் - ருக்மணி திருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரி அருகே அக்ரஹாரம் சிவாஜி நகரில் அமைந்துள்ள பாண்டுரங்க ருக்மணி கோயிலில் பிரமோற்சவ விழாவையொட்டி சுவாமி- அம்மன் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் சிவாஜி நக... மேலும் பார்க்க