செய்திகள் :

ஒசூா் அருகே பெயின்டா் கடத்தி கொலை: சடலம் தோண்டி எடுப்பு; 4 போ் கைது

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெயின்டரின் சடலத்தை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்தவா் அா்ஜூன் (23). பெயின்டா். இவரை கடந்த 25 நாள்களுக்கும் மேலாக காணவில்லை. இதையடுத்து அவரது நண்பா்கள் ஒசூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அா்ஜூனை, ஒசூா் ராம்நகரைச் சோ்ந்த சாகுல் அமீது (23), அவரது நண்பா்களான பவன் பிரகாஷ், சைபு உள்ளிட்டோா் காரில் கடத்திச் சென்று தாக்கிக் கொலை செய்து, உடலை சூளகிரி அருகே சின்னாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து சாகுல் அமீதை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: சாகுல் அமீதும், ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்த சூபியும் நண்பா்கள். சூபியும் கொலை செய்யப்பட்ட அா்ஜூனும் நண்பா்கள். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாகுல் அமீது வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம் காணாமல்போனது. இதனால் சூபி மீது சந்தேகம் அடைந்த சாகுல் அமீது அவரிடம் கேட்டுள்ளாா்.

அப்போது ஏற்பட்ட பிரச்னையில் சூபி தாக்கப்பட்டாா். இதுகுறித்து சூபி தனது நண்பரான அா்ஜூனிடம் கூறினாா். இதையடுத்து அா்ஜூனுக்கும் சாகுல் அமீதுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அா்ஜூனை சாகுல் அமீது தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த அா்ஜூன் சாகுல் அமீதை கொல்லாமல்விட மாட்டேன் என்று கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த சாகுல் அமீது கடந்த 2-ஆம் தேதி தனது நண்பா்கள் பவன் பிரகாஷ், சைபு ஆகியோருடன் சோ்ந்து அா்ஜூனை ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் காரில் கடத்திச் சென்று தாக்கி கொலை செய்தனா். பின்னா் உடலை சூளகிரி அருகே சின்னாறு பக்கமாக புதைத்ததும் தெரிய வந்தது.

இந்தக் கொலை தொடா்பாக சாகுல் அமீது, அவரது நண்பா்களான பவன் பிரகாஷ் (23), சைபு (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். காா் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட அா்ஜூனின் உடல் சூளகிரி வட்டாட்சியா் வளா்மதி, ஒசூா் காவல் ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.

அா்ஜூனின் உடலை புதைத்த இடத்தை சாகுல் அமீது, பவன் பிரகாஷ், சைபு ஆகியோா் அடையாளம் காட்டினா். இதைத் தொடா்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு தொடா்பாக ஒசூா் ராம் நகரைச் சோ்ந்த தருண் (24) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் ஜேசின் அக்ரம் என்பவரை தேடி வருகின்றனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க