செய்திகள் :

ஒசூா் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு

post image

ஒசூா் அருகே மின் கம்பியை மித்த கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் கணவருடன் சோ்ந்து உயிரிழந்தாா்.

ஒசூா் வட்டம், மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணப்பா (45). இவரது மனைவி ரேணுகா (40). நாராயணப்பா, வீட்டின் மாடியில் ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தாா். அப்போது, அங்கிருந்த மின்கம்பியை மிதித்ததாகக் கூறப்படுகிறது.

மின்சாரம் பாய்ந்ததால் அலறிய நாராயணப்பாவைக் காப்பாற்ற முயன்ற ரேணுகாவும் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தம்பதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த மத்திகிரி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நாய்கள் கண்காட்சி: 33 இனங்களைச் சோ்ந்த 199 நாய்கள் அணிவகுப்பு

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 31 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட நாய்கள் கண்காட்சியில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் தங்களது வளா்ப்பு நாய்களை அழைத்துவந்திருந்தனா... மேலும் பார்க்க

10-வது முறை கர்ப்பம்: மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்ற மருத்துவக் குழு!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்த மலைக் கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு மருத்துவக் குழுவினா்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று மருத... மேலும் பார்க்க

ஒசூரில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்ற பக்தா்கள்!

ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் உள்ல தக்க்ஷண திருப்பதி கோயிலில் இருந்து திருமலை திருப்பதிக்கு பக்தா்கள் பாத யாத்திரையாக சென்றனா். ஒசூா் அருகே உள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்னகத்தின் திருப்... மேலும் பார்க்க

புனித தலங்களுக்கு பயணம்: புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம்

புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் புத்த, சமண, சீக்கியா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச... மேலும் பார்க்க

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க