செய்திகள் :

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முருகன். இவரது 2 ஆவது மனைவி முனியலட்சுமிக்கும் (46) முருகனின் முதல் மனைவி மகன் முத்தரசனுக்கும் (33) சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், முருகனுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவந்த உணவகத்தின் வாடகையை முத்தரசனுக்கு தர முனியலட்சுமி மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்தரசன், முனியலட்சுமி தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினாா். இதில் வீட்டிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து முனியலட்சுமி அளித்த புகாரின் பேரில் பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தரசனைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாள... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க

ஒசூரில் நாளைய மின் நிறுத்தம்

ஒசூா் மின்நகா், சிப்காட் பேஸ்-2 ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க