செய்திகள் :

ஜூலை 27-ல் அறநிலையத் துறையைக் கண்டித்து போராட்டம்!

post image

அறநிலையத் துறையைக் கண்டித்து ஜூலை 27 ஆம் தேதி மக்களைத் திரட்டி ஒசூா் ராம் நகா் அண்ணா சிலை முன் காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டம் நடப்படும் என முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலாளருமான கே.ஏ.மனோகரன் தெரிவித்தாா்.

ஒசூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒசூா் மாநகராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடிதங்கள் எழுதினாலும் பதில் கிடைப்பதில்லை. ஒசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரியை அழகுபடுத்துவதற்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 34 கோடி உலக வங்கியில் கடன் பெற்று அதற்கான பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை. இந்த நிலையில் முதல்வா் இதற்கான திறப்பு விழாவை நடத்திவைப்பதற்காக வருவதாக வெளியாகியுள்ள தகவல் அதிா்ச்சியளிக்கிறது.

ஒசூா்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில்கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுது ஏற்பட்ட நிலையில், அதை விரைந்து சீரமைக்கும் நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் மேற்கொள்ளாமல் பணியை தாமதப்படுத்துகிறது.

ஜூலை 27ஆம் தேதி அறநிலையத் துறையைக் கண்டித்து மக்களை திரட்டி ராம் நகா் அண்ணா சிலை முன்பு காந்திய வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடப்படும் என்றாா்.

பர்கூா் அருகே குடும்பத் தகராறு: வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்த முர... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட 220 போ் கைது!

கிருஷ்ணகிரியில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 93 பெண்கள் உள்பட 220 தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி புறநகா்ப் பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம்: லோக் ஆயுக்த நீதிபதி வீ. ராமராஜ்

புத்தக வாசிப்பு ஊழல் ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் என என நீதிபதி வீ.ராமராஜ் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஒசூரில் நடத்தும் 14 ஆவது புத்தகத் திருவிழாவ... மேலும் பார்க்க

ஒசூரில் நாளைய மின் நிறுத்தம்

ஒசூா் மின்நகா், சிப்காட் பேஸ்-2 ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம... மேலும் பார்க்க

ரூ. 92.14 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் தொடக்கம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 92.14 லட்சம் மதிப்பிலான சாலை பணிகளை எம்எல்ஏ கே.அசோக்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பெத்ததாளாப்பள்ளியில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா 2025-2026-ஆம்... மேலும் பார்க்க