செய்திகள் :

ஒடிசாவில் காலராவுக்கு 11 பேர் பலி! அரசு விடுமுறைகள் ரத்து!

post image

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

ஜாஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், காலரா தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தின் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ராஜா பண்டிகை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஜாஜ்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ”மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் காலரா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஜூன் 14 முதல் 16 வரை வழங்கப்பட்ட விடுமுறைகள் ரத்து செய்யப்படுகின்றன” என அவர் கூறியுள்ளார்.

அவசரகாலத்தில் அனைத்து ஊழியர்களும் பணியில் தேவைப்படுவார்கள் என்பதால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காலரா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று (ஜூன் 13) பலியாகியுள்ளார். இதன்மூலம், அம்மாவட்டத்தில் காலராவுக்கு பலியானோரது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அம்மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வீடுகள் தோறும் பரிசோதனைகள் நடத்தப்படுவதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் தேவைகள் அனைத்தும் அங்குள்ள மருத்துவமனைகளில் தயார்நிலை வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, அம்மாவட்டம் முழுவதும் சுமார் 750 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 300 பேர் தற்போது அங்குள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்துடன், சுமார் 450-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் வெளியானது

இயல்பு நிலைக்குத் திரும்பும் பஹல்காம்! பக்ரீத் விடுமுறையில் பெருகிய சுற்றுலா வணிகம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பஹல்காம் சுற்றுலாத் தலமானது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பக்ரீத் விடுமுறையையொட்டி உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து ஏ... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரப் பிரதேசத்தில் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அமோதா கிராமத்தில் பி.ஆர். அம்ப... மேலும் பார்க்க

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது: பினராயி விஜயன்

இஸ்ரேல் நீண்ட காலமாக ரௌடி நாடாக அறியப்படுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பினராயி விஜயன், ஈரான் மீதான இஸ்ரே... மேலும் பார்க்க

அமைதியாக இருப்பதே புத்திசாலித்தனம்! பாஜகவினருக்கு மத்திய அமைச்சர்கள் அறிவுரை!

சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுரை வழங்கினார்.விஜய் ஷாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், கட்சியினர் பேசும்போது கவனமுடன் பேச வேண்டும் என்று மத்தி... மேலும் பார்க்க

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க