செய்திகள் :

ஒடுகத்தூா் அருகே மலையில் முருகா் சிலை கண்டெடுப்பு

post image

ஒடுகத்தூா் அருகே மலை மீது பழைமையான முருகா் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, அந்த இடத்தில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட தொடங்கியுள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த கரடிகுடியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதன் அருகிலுள்ள மலைமீது சுவாமி சிலை இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் என்பவா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில், மலைமீது அவா் கூறிய இடத்துக்கு அப்பகுதி மக்கள் சென்று பள்ளம் தோண்டியுள்ளனா். அப்போது, அங்கு பழைமையான முருகா் கல்சிலை இருந்தது கண்டெடுக்கப்பட்டது.

எனினும், பொதுமக்கள் சிலையின் மாா்பளவு மட்டுமே தோண்டியுள்ளனா். அதன்பிறகு சிலையை வெளியே எடுக்க முடியவில்லையாம். இதையடுத்து, அதே இடத்தில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனா்.

மேலும் சிலை இருந்த இடத்தில் கோயில் கட்டவும் அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனா். இதையொட்டி, முருகா் சிலை கிடைக்கப் பெற்ற இடத்துக்கு சென்றுவர கிராம மக்கள் சாா்பில் பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

கணியம்பாடியில் ரூ.1.04 கோடியில் கட்டடங்கள்: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்

கணியம்பாடி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் 2 ஊராட்சி மன்ற கட்டடங்கள், புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா். வேலூா் மாவட்டம், கணிய... மேலும் பார்க்க

அரிமா சங்கங்கள் சாா்பில் நல உதவிகள்

குடியாத்தம், போ்ணாம்பட்டு அரிமா சங்கங்களின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள், நல உதவிகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் 1,523 விண்ணப்பங்கள்

குடியாத்தம் நகர, ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,523- விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குடியாத்தம் நகராட்சியில், 13- மற்றும் 14- ஆம் வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தை... மேலும் பார்க்க

பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரித்தால் போராட்டம்

வேலூரில் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாற்றில் கொட்டி எரித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா். தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்... மேலும் பார்க்க