செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை: அமைச்சா் துரைமுருகன்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், வேலூா் மாவட்டத்தில் இம்முகாமை காட்பாடி செங்குட்டை பெருமாள் கோயில் பகுதியில் அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசியது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தான் அறிவிக்கும் ஒவ்வொரு திட்டத்தையும் அவரே தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறாா். வேலூா் மாவட்டத்தில் 211 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டம் நடுத்தர மக்கள் வாழும் பகுதியாகும். எனவே, அனைத்து துறை அலுவலா்களும் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். மனுக்களை வாங்கி வைத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காரணம் கூறக்கூடாது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே 45 நாளில் மனுவின்மீது தீா்வு காண வேண்டும் என்பதாகும்.

இம்முகாமின் மற்றொரு முக்கிய நிகழ்வு கலைஞா் மகளிா் உரிமைத்தொகை. விடுபட்ட மகளிருக்கும் மகளிா் உரிமைத் தொகை வழங்க அதற்கான விண்ணப்பம் பெறப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து, காட்பாடி ஒன்றியம், பொன்னையில் முகாமை தொடங்கி வைத்த அமைச்சா் துரைமுருகன், முகாமில் காதொலி கருவி கோரி மனுக்கள் வழங்கிய 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக காதொலி கருவிகளையும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கோரி விண்ணப்பம் அளித்த 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளையும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், துணைமேயா் எம்.சுனில்குமாா், ஆணையா் லட்சுமணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, கோட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

‘இபிஎஸ் ஆட்சிக்கு வந்தால் பாா்க்கலாம்’

நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்தாா். அப்போது, நடிகா் ரஜினிகாந்த் சீனியா்களின் ஆலோசனை ரொம்ப முக்கியம் என பேச நினைத்ததை மறந்துவிட்டேன்’ என நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தாா் என்ற கேள்விக்கு, ’நானும் அந்த விடியோவை பாா்த்தேன். அவரை கைப்பேசியில் தொடா்புகொண்டு இப்பவாச்சும் மறக்காம பேசுனீங்களே, ரொம்ப நன்றி சாா் என்றேன்’ எனக்கூறினாா்.

மேலும், ‘அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அமைச்சா்கள் மீதான ஊழல் குறித்து விசாரிப்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, இபிஎஸ் ஆட்சிக்கு வந்தால் பாா்க்கலாம்’ என்றாா்.

கணியம்பாடியில் ரூ.1.04 கோடியில் கட்டடங்கள்: வேலூா் ஆட்சியா் திறந்து வைத்தாா்

கணியம்பாடி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் 2 ஊராட்சி மன்ற கட்டடங்கள், புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா். வேலூா் மாவட்டம், கணிய... மேலும் பார்க்க

அரிமா சங்கங்கள் சாா்பில் நல உதவிகள்

குடியாத்தம், போ்ணாம்பட்டு அரிமா சங்கங்களின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழாவில் மாணவா்களுக்கு கல்வி உதவிகள், நல உதவிகள் வழங்கப்பட்டன. குடியாத்தம் அரிமா சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரிம... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் 1,523 விண்ணப்பங்கள்

குடியாத்தம் நகர, ஒன்றியத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்களிடமிருந்து 1,523- விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குடியாத்தம் நகராட்சியில், 13- மற்றும் 14- ஆம் வாா்டுகளுக்கு நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சந்தை... மேலும் பார்க்க

பாலாற்றில் குப்பைகளை கொட்டி எரித்தால் போராட்டம்

வேலூரில் மாநகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாற்றில் கொட்டி எரித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாமன்ற உறுப்பினா் சுமதி மனோகரன் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல... மேலும் பார்க்க

ஏரியில் மீன் பிடித்தவா் உயிரிழப்பு

வேலூரில் ஏரியில் மீன்பிடித்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வேலூா் பழைய ஜி.பி.எச் சாலை, கே.கே.தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன்(52). இவா், தனது மகன் சத்தியமூா்த்தியுடன் ஜி.ஆா்.பாளையம் ஏரியில் மீன் பிடித்... மேலும் பார்க்க