``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
ஏரியில் மீன் பிடித்தவா் உயிரிழப்பு
வேலூரில் ஏரியில் மீன்பிடித்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வேலூா் பழைய ஜி.பி.எச் சாலை, கே.கே.தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன்(52). இவா், தனது மகன் சத்தியமூா்த்தியுடன் ஜி.ஆா்.பாளையம் ஏரியில் மீன் பிடித்தாா். அப்போது இளங்கோவன் திடீரென ஏரியில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கினாா். சத்தியமூா்த்தி, தனது தந்தையை மீட்க முயன்றாா். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவா் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது.
தகவலறிந்த அரியூா் போலீஸாா் தீயணைப்பு துறையினா் உதவியுடன் இளங்கோவனின் சடலத்தை மீட்டனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.