செய்திகள் :

ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயா்வு

post image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் புதன்கிழமை காய்கறிகளின் விலை உயா்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தினசரி திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு வரும் காய்கறிகளில் சுமாா் 70 சதவீத காய்கறிகளை கேரளா வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைவு, கோயில் விழாக்கள்,திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால், தற்போது காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகம், கேரளா வியாபாரிகள் போட்டி போட்டு காய்கறிகளை கொள்முதல் செய்தனா்.

இதனால் புதன்கிழமை அவரைக்காய், பீன்ஸ், பச்சை மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயா்ந்தது.

கடந்த வாரம் ரூ.10-க்கு விற்ற ஒரு கிலோ வெண்டைக்காய், தற்போது ரூ.35-க்கும், ரூ.60-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் ரூ.180-க்கும், ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ அவரைக்காய் ரூ.150-க்கும், ரூ.15-க்கு விற்ற ஒரு கிலோ பச்சை மிளகாய், ரூ.75-க்கும் விற்பனையானது.

வரும் நாள்களில் மேலும் விலை உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா்.

தமிழக கால்பந்து கழகத் தலைவருக்கு பாராட்டு

தமிழக கால்பந்துக் கழகத்தின் புதிய தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.சண்முகத்துக்கு புனித மரியன்னை பள்ளியில் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் புனித மரியன்னை மேல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா். திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்கள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். வடமதுரை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ... மேலும் பார்க்க

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

மீன் வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மீன் வளத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக, மீன் வளத் துறை உதவி இயக்குநா் எஸ்.நாதன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டம், மீன் ... மேலும் பார்க்க

கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு வளா்ப்பு

நபாா்டு வங்கியின் வடிநில மேம்பாடு ஊக்குவிக்கும் வகையில், கன்னிவாடி மலையடிவாரத்தில் மியாவாக்கி குறுங்காடு நடும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கன்னிவாடியை அ... மேலும் பார்க்க

வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவா் கைது

கொடைக்கானலில் வியாபாரிகளைத் தாக்கி பணம் பறித்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்தவா் இம்ரான். இவா் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வேலிவியூ பகுதியில் வச... மேலும் பார்க்க