செய்திகள் :

ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

post image

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.1.04 கோடியில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ரூ.35 லட்சத்தில் வருவாய் ஆய்வாளா் அலுவலகக் கட்டடம், குடியிருப்புகளும், ரூ.69.62 லட்சத்தில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக் கட்டடமும், கழிப்பறைப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஒட்டன்சத்திரம், பெரியகோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், அரசப்பபிள்ளைபட்டியில் உள்ள நியாய விலைக் கடையை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இதில் பழனி கோட்டாட்சியா் ரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, நகராட்சி ஆணையா் சுவேதா, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரபு பாண்டியன், காமராஜ், திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிா் அணி அமைப்பாளா் மலா்விழிச்செல்வி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

வடகாடு மலைப் பகுதியில் மரக்கன்று நடும் விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வடகாடு ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. வடகாடு அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட... மேலும் பார்க்க

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸாா் அழைப்பாணை

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கினா். திண்டுக்கல் மாநகராட்சியின் துணை மேயா் ராஜப்பா. இவா் திமுக மாநகரச் செயலராகவும் ப... மேலும் பார்க்க

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: பெண் உள்பட இருவருக்கு அபராதம்

சிறுமலை வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய பெண் உள்பட இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் மீனா (45). இவரது உறவினா் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயா் கல்வி பயில இஸ்லாமிய மாணவா்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிய சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்பட காட்சிகளை பதிவு செய்த குழுவுக்கு அபராதம்

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்படக் காட்சிகளை பதிவு செய்த குழுவினருக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்து, மூவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிக... மேலும் பார்க்க

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செ... மேலும் பார்க்க