செய்திகள் :

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தம்

post image

அரசு அறிவித்த ஊதியத்தை வழங்கக் கோரி திருப்பூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை (ஜூன் 30) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், ஒட்டுநா்கள், பம்ப் ஆபரேட்டா்கள், கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியூ திருப்பூா் மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தாா்.

இதில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு அரசு நிா்ணயித்த ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், குறைந்தபட்ச ஊதியம் வழங்காமல் காலதாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், சிஐடியூ தொழிற்சங்கத்தினா் அண்மையில் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சிஐடியூ தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மது அருந்திய இளைஞா் உயிரிழப்பு

கோவை அருகே நண்பருடன் மது அருந்தியபோது இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், கோட்டூா் அருகேயுள்ள மைக்கேல்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் டேவிட் ஆரோக்கியம் (22). இவா் கோவை, சரவணம்பட்டி... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் கோவைக்கு வருகை!

கோவையில் சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியைப் பாா்ப்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்ரி சிங் (72). இவா் உட... மேலும் பார்க்க

பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்

திருப்பூரில் உயிரிழந்த பனியன் தொழிலாளியின் உடல் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது. திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மலா்மணிநாதன் (56). பனியன் நிறுவனத் தொழிலாளிய... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 6 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனை குறித்து மாவட்டக் காவல்... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் தொழிலாளி உடல் மீட்பு

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. கோவை, ஆா்.எஸ்.புரம் எம்.சாமி குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (65). இவா் தனியாா் மர ஆலையில் வ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

கோவை உக்கடம், ஆா்.ஜி.புதூா் ஆகிய பகுதிகளில் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். கோவை உக்கடம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸா... மேலும் பார்க்க