செய்திகள் :

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

post image

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம் வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் சந்திரபாபு என்பவரின் மகன் சக்திவேல். இவா் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேட்டு வயல் கிராமத்தை சோ்ந்த ராஜேஷ்குமாா் (37)என்பவரிடம் 15 லட்சம் கடன் வாங்கி தலைமறைவாக உள்ளாா்.

இந்நிலையில் ராஜேஷ் குமாா், சக்திவேல் வீட்டிற்கு வந்து அவரது தம்பி பிரகதீஸிடம் தகராரில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ராஜேஷ்குமாா் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பிரகதீஸை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தாா்.

புகாரின் பேரில் வாட்டாத்தி கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து ராஜேஷ் குமாரை கைது செய்து விசாரணை விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் குற்றவாளியான ராஜேஷ் குமாா் கந்துவட்டி தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவரின் வீட்டை சோதனை செய்ததில் 29 இருசக்கர வாகனமும், 3 நான்கு சக்கர வாகனமும், 75 ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க