செய்திகள் :

ஒருநாள் சுற்றுலா பயண திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம்: சுற்றுலாத் துறை!

post image

சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான ஒருநாள் சுற்றுலா பயணத் திட்டத்துக்கு முன்பதிவு செய்யலாம் என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடைகாலத்தை முன்னிட்டு ஒரு நாள் சுற்றுலா தொகுப்புகளான சென்னை, புதுச்சேரி, மாமல்லபுரம் மற்றும் முட்டுக்காடு படகு இல்லம் மற்றும் சொகுசு கப்பல் தொகுப்புடனான சுற்றுலா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களின் வசதிக்காக சனிக்கிழமைகளில் 1 மணி நேரம் சவாரி மற்றும் ஞாயிற்றுகிழமை ஒன்றரை மணி நேரம் சவாரி செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி படகு சவரி செய்யவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் தொலைபேசி: 1800 425 1111, 044-2533 3333, 044-2533 3444 மற்றும் வாட்ஸ்ஆப் 75500 63121 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை ... மேலும் பார்க்க

வடகாடு மோதல் சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணையக்குழு ஆய்வு!

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆலங்கு... மேலும் பார்க்க

10 வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் எடுத்து பொள்ளாச்சி மாணவி முதலிடம்!

கோவை பொள்ளாச்சி மாணவி சுபஸ்ரீ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவித்து இருந்தபடி, இன்று(மே 16) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... மேலும் பார்க்க

'ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார்' - நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

கடுங்கோடை காலம் இன்றுடன் முடிகிறது; இனி.. பிரதீப் ஜான்

சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மே... மேலும் பார்க்க