செய்திகள் :

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு!

post image

ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் பூட்டப்பட்ட காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வசிப்பவர் பிரவீன் மிட்டல். இவர், தனது மனைவி, பெற்றோர், இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் தாமில் உள்ள ஆன்மிக நிகழ்வுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, குடும்பத்துடன் காரை பூட்டிக்கொண்டு விஷம் குடித்துள்ளனர். காருக்குள் உயிருக்கு போராடுவதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஹரியாணா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், காருக்குள் கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் கடன் பிரச்னை காரணமாக அழுத்தத்தில் இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தடயவியல் நிபுணர்கள் காரை சோதனை செய்தனர்.

7 பேரின் உடலும் உடற்கூராய்வுக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க