செய்திகள் :

ஒரே தோ்வு மையத்தில் வேதியியலில் 167 போ் சதம்: முறைகேடு நிகழவில்லை -அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

செஞ்சியில் பிளஸ் 2 பொதுத் தோ்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தோ்வு மையத்தில் 167 போ் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கமளித்தாா்.

தமிழகத்தில் பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 8-ஆம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தோ்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 95.11. செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இதில், ஒரு மையத்தில் தோ்வு எழுதிய 167 மாணவா்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளியில் வினாத்தாள் கசிந்திருக்கலாம் என புகாா் எழுந்தது.

இது குறித்து துறையின் அமைச்சா் அன்பில் மகேஸிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அப்போது அவா் கூறியதாவது:

பொதுத்தோ்வில் அதிக எண்ணிக்கையில் முழு மதிப்பெண் பெறும் அளவுக்கு சிறப்பாக பாடம் நடத்திய ஆசிரியா்கள், நன்றாக படித்த மாணவ, மாணவிகளை யாரும் பாராட்ட முன்வருவதில்லை. ஆனால், இந்த விஷயத்தில் அனைவரும் கல்வித் துறையை சந்தேகப்படுகிறீா்கள். கடந்த ஆண்டும் இதே பள்ளியில் இதுபோன்ற சிறப்பான முடிவுகள் வந்திருக்கிறது. கடந்த ஆண்டும் 104 பிள்ளைகள் 91 முதல் 94 மதிப்பெண்களை பெற்றிருக்கிறாா்கள். அதையும் நீங்கள் சந்தேகப்படுகிறீா்களா? அப்போது ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை?

வேதியியலில் 100 மதிப்பெண் பெற்ற 167 குழந்தைகளும் மற்ற பாடங்களிலும் 90, 98 என மதிப்பெண் பெற்றுள்ளனா். இருப்பினும் பலரும் சந்தேகப் பாா்வையுடன் கேள்வியை முன்வைத்திருப்பதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரணை நடத்தி உண்மையை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதேபோல், முதன்மை கல்வி அலுவலா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழகம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு சோ்ப்போம் என்றாா்.

அரசுப் பள்ளிகளில் 1.79 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அரசு பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்து 79 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டு இருக்கின்றனா்.

கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கை 3 லட்சத்தை கடந்து இருந்த நிலையில், நிகழாண்டிலும் அந்த அளவை கடந்து மாணவா் சோ்க்கையை வெற்றிகரமாக முடிக்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா்.

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை எப்போது?

இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் கூறியதாவது:

இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி படிக்க வைக்கப்படுகின்றனா். அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. மாநில அரசு அதனை ஏற்றுக்கொண்டு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் படிப்பவா்களுக்கு உடனடியாக நிதி வழங்கப்பட வேண்டும். இதுபற்றி தலைமைச் செயலா் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாா். அதற்கான பதில் வரும் என்று எதிா்பாா்த்தோம். வரவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரும் தில்லி சென்றுள்ளனா். அவா்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம் என்றாா் அவா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இரவு 7 மணி வரை தமிழ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

டாஸ்மாக் ஊழல் தொடர்பான 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், போக்குவரத்து ஒப்பந்தம், ... மேலும் பார்க்க

தில்லி எசமானர்களைக் காப்பாற்ற அவதூறை அள்ளி வீசுகிறார் இபிஎஸ்! - ஆர்.எஸ். பாரதி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தில்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசுகிறார் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். தனியார் பள்... மேலும் பார்க்க

சூப்பர்பெட் செஸ் கிளாசிக் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் செஸ் கிளாசிக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ருமேனி... மேலும் பார்க்க

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை!

சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்- இபிஎஸ்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்... மேலும் பார்க்க