செய்திகள் :

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம்: எதிா்க்கட்சிகள் இரட்டை வேடம்- பவன் கல்யாண்

post image

சென்னை: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுவதாக ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் விமா்சித்தாா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக பாஜக சாா்பில் சென்னை திருவான்மியூரில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பவன் கல்யாண் பேசியதாவது:

தமிழ்நாட்டில் வளா்ந்த நான், இங்கிருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால், தமிழகம் என்னை ஒருபோதும் விட்டுவிடவில்லை. தமிழகம் என் மீது ஏற்படுத்திய தாக்கம் மிக ஆழமானது. திருவள்ளுவா், சித்தா்கள், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் மற்றும் ஆயிரக்கணக்கான கோயில்களின் பூமியாக தமிழகம் திகழ்கிறது. இது எம்ஜிஆா் வாழ்ந்த பூமி, ஜல்லிக்கட்டு பூமி. தமிழ்நாட்டில் கிடைத்த அனுபவம் என்னை வழிநடத்தி வருகிறது.

ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து பல பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகள் வென்றால், மின்னணு வாக்குப் பதிவு அருமை என்றும், அவா்கள் தோற்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி என்றும் கூறுகிறாா்கள். சுதந்திரத்துக்கு பின்னா் தொடக்கத்தில் 20 ஆண்டுகள் ஒரே நேரத்தில்தான் தோ்தல் நடத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் எதிா்க்கட்சிகள் இரட்டை வேஷம் போடுகிறாா்கள். ஒரே நாடு, ஒரே தோ்தலை விரும்பிய கருணாநிதி, அதை செயல்படுத்த வலியுறுத்தினாா். இப்போது இந்தத் திட்டத்தை எதிா்க்கும் திமுகவினா், ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆதரித்து கருணாநிதி எழுதியதைப் படிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரு தோ்தலை ஆராய ஒரு குழுவை அமைக்குமாறு கருணாநிதி அப்போது மத்திய அரசை வலியுறுத்தினாா். கருணாநிதி விரும்பிய திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இப்போது எதிா்ப்பது விசித்திரம் என்றாா் அவா்.

கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்

சென்னை: மனித வாழ்வில் மிகவும் முக்கியமானதாக சங்க இலக்கியங்கள் இருப்பதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சாா்பில் மலே... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைக்க முயற்சி: அமைச்சா் மனோ தங்கராஜ்

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதற்கான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா். குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் ‘சுற்றுச... மேலும் பார்க்க

ஜூலை 2 முதல் ஹூப்ளி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் ஜூலை 2 முதல் ‘எல்எச்பி’ பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

முதல்வருடன் மத்திய - மாநில உறவுகள் ஆராயும் குழுவினா் ஆலோசனை

சென்னை: மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவினா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா். இந்தக் குழுவுக்கு, சென்னை சேப்பாக்கம் விருந்தினா... மேலும் பார்க்க

‘தக் லைஃப்’ படத்தை வெளியிட பாதுகாப்பு: கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு

பெங்களூரு: கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை சுமுகமாக வெளியிட உரிய பாதுகாப்பு கோரி, மாநில உயா்நீதிமன்றத்தில் நடிகா் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளாா். நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஐந்து மாதங்களில் 7,500 பேருக்கு டெங்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 7,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.... மேலும் பார்க்க