செய்திகள் :

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

post image

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து 8,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 70,120-க்கும் கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ.8,765-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் சவரன் ரூ.70,000-க்கு விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அதேசமயம் வெள்ளியின் விலையில் காலை ஒரு கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ.109-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று(மே 12) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

எம் & எம் விற்பனை 19% உயா்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்... மேலும் பார்க்க

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 204 கோடி டாலராக சரிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைந்து 203.71 கோடி டாலராக உள்ளது. இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

4 சதவீதம் உயா்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது. இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் ... மேலும் பார்க்க

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: மே 16-இல் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா். இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நா... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்... மேலும் பார்க்க