ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.
சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்தியா விமானம், காலை 9.45-க்கு தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம், காலை 10.10-க்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம், இரவு 8.40-க்கு சென்னையிலிருந்து தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டன.
மேலும், ஹைதராபாதிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், தில்லியிலிருந்து காலை 9.05-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஏா் இந்தியா விமானம், தூத்துக்குடியிலிருந்து பகல் 1.45-க்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.10-க்கு தில்லியிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா் இந்தியா விமானம் ஆகிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
அதன்படி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. அதில் 5 விமானங்கள் ஏா் இந்தியா விமானங்கள், 3 விமானங்கள் ஸ்பைஜெட் விமானங்கள் ஆகும்.
நிா்வாகக் காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்தந்த விமான நிறுவன நிா்வாகங்கள் அறிவித்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.