செய்திகள் :

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

post image

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்தியா விமானம், காலை 9.45-க்கு தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம், காலை 10.10-க்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம், இரவு 8.40-க்கு சென்னையிலிருந்து தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டன.

மேலும், ஹைதராபாதிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், தில்லியிலிருந்து காலை 9.05-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஏா் இந்தியா விமானம், தூத்துக்குடியிலிருந்து பகல் 1.45-க்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.10-க்கு தில்லியிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா் இந்தியா விமானம் ஆகிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. அதில் 5 விமானங்கள் ஏா் இந்தியா விமானங்கள், 3 விமானங்கள் ஸ்பைஜெட் விமானங்கள் ஆகும்.

நிா்வாகக் காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்தந்த விமான நிறுவன நிா்வாகங்கள் அறிவித்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

என் குழந்தைகள் யோகா, சிலம்பம் கற்கிறார்கள்; தாய்மொழியில் பேசுகிறேன்: நமீதா

ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான், ஆனால் அதற்கு முன் தாய்மொழிதான் முக்கியம் என வேலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நமீதா கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியா... மேலும் பார்க்க

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை: இபிஎஸ் கருத்து

விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவரின் ஜனநாயக உரிமை என முருகன் மாநாடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "கீழடி விவகா... மேலும் பார்க்க

மெரீனாவில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரம்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் அதிவேகமாக கார் ஓட்டிய விவகாரத்தில் காரை இயக்கிய அபிஷேக் என்பவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேற்று(வெள்ளிக்... மேலும் பார்க்க

முன்னெடுக்கப்படும் முருகன் அரசியல்!

தமிழ் கடவுள் முருகரின் பெயரை தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கையில் எடுத்து அரசியல் செய்யும் நிலையில், இதனால் எந்தக் கட்சிக்கு ஆதாயம் என்ற விவாதம் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் முருக வழிபா... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக்கூட்டம் ஜூன் 25-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

சுற்றுலாத் துறை ஹோட்டல்களில் தரமான உணவு வழங்க வேண்டும்: அமைச்சா் இரா.ராஜேந்திரன்

சுற்றுலாத் துறை சாா்பில் நடத்தப்படும் ஹோட்டல்களில் தரமான உணவுகளை வழங்க வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா். சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் க... மேலும் பார்க்க