செய்திகள் :

ஒற்றுமை, நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்லும் மகா கும்பமேளா: அமித் ஷா

post image

மகா கும்பத்தை விட உலகில் வேறெந்த நிகழ்வும் நல்லிணக்கம் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.

குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் ஹந்து ஆத்யாத்மிக் சேவா எனப்படும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது,

பல்வேறு நாடுகளிலிருந்து தூதர்கள் கும்பமளாவுக்கு அழைப்பு அட்டைகளை தன்னிடம் கோரியதாகவும், அதற்கு இந்த மாபெரும் கூட்டத்திற்கு முறையான அழைப்பு ஏதும் இல்லை. ஏனென்றால் கோள்களின் சீரமைப்பின்படி 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரும் மதத் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தாங்களாகவே இங்குக் கூடுகிறார்கள் என்று அவர் கூறினார்.

40 கோடி மக்கள் அழைப்பின்றி ஒரே இடத்தில் கூடுவதை அவர்களால் நம்ப முடியவில்லை, பெரியளவிலான இந்த நிகழ்வை யார் ஏற்பாடு செய்கிறார்கள் என்று கேட்டபோது, ​​“மதத் தலைவர்கள், புனிதர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் கும்பத்தில் கூடும் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய மாநில அரசும் தேவையான நடவடிக்கைகள் முழு அளவில் செய்வதாக அவர் தெரிவித்தார்.

மகா கும்பத்தை விட உலகில் வேறு எந்த நிகழ்வும் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் கும்பத்திற்கு வருவோர் யாரும் நீங்கள் எந்த மதம், ஜாதி என்று யாரும் கேட்பதில்லை. பாரபட்சமின்றி உணவு பெற்று புனித நீராடியபின் மகிழ்ச்சியோடு வீடு திரும்புகிறார்கள்.

கும்பத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் கூடினாலும், கங்கைக் கரையில் உள்ள கூடாரங்களில் அனைவருக்கும் தங்கும் வசதி இருப்பதால், யாரும் உணவகங்களில் தங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.

முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும், இதுபோன்ற ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக இருந்துள்ளன, குஜராத் மக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், மகா கும்பத்தைப் பார்வையிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜனவரி 27-ல் கங்கையில் புனித நீராட மகா கும்பத்திற்கு வரவிருப்பதாக அவர் கூறினார்.

அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயிலிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம... மேலும் பார்க்க

வரிச் சலுகைக்கு வழிகாட்டியவா் பிரதமா் மோடி - மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரிச் சலுகை அளிக்கும் நடவடிக்கைக்கு வழிகாட்டியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மேலும், ‘மக்களால், மக... மேலும் பார்க்க

இந்திய தயாரிப்புகள் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க குழு: மத்திய அரசு

தேசிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களின் சந்தைப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து, அதை ஊக்குவிக்கும் வகையில் குழு ஒன்றை மத்திய அரசு அமை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மா்ம உயிரிழப்புகள்: நோயாளிகளுடன் எய்ம்ஸ் குழு சந்திப்பு

ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்மமான நோயால் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அந்த நோய்க்கு சிகிச்சை பெற்றுவரும் 11 நோயாளிகளை தில்லி எய்ம்ஸ் குழு சந்தித்தது. மேலு... மேலும் பார்க்க

கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இன்று வசந்த பஞ்சமி புனித நீராடல்: பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் தீவிரம்

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் சிறப்புக்குரிய வசந்த பஞ்சமி புனித நீராடல் திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித ... மேலும் பார்க்க