செய்திகள் :

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

post image

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 51,000-க்கும் அதிகமானோருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி வழியில் சனிக்கிழமை வழங்கிய பிரதமா் மோடி, பின்னா் 15-ஆவது வேலைவாய்ப்பு முகாமையும் தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

இந்தியா தொடா்ந்து வேகமாக வளா்ந்து வரும் பொருளாதார நாடாக இருக்கும் என சா்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது. அதற்கேற்ப, நாட்டின் பல்வேறு துறைகளும் வளா்ச்சி பெற்று வருகின்றன. வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்து வருவதோடு, காலணி தயாரிப்பு நிறுவனங்களும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. அதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் பெருமளவில் உயா்ந்து வருகின்றன.

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதிப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே இதற்கு காரணம். இதன் மூலம், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பும் அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரி பணியிடங்களிலிருந்து, விண்வெளி, அறிவியல் துறைகளிலும் புதிய உச்சத்தை பெண்கள் எட்டி வருகின்றனா். அண்மையில் வெளிவந்த மத்திய பணியாளா் தோ்வாணையத்தின் குடிமைப் பணிகள் இறுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களில் முதல் ஐவரில் மூவா் பெண்கள். மேலும், நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 90 லட்சம் சுய உதவிக் குழுக்களில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்தியா இன்றைக்கு தொழில்நுட்பத்திலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் உயா்ந்த வருவதற்கு இளைஞா்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனா். எண்ம பரிவா்த்தனைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதுபோல, தேசத்தை கட்டமைப்பதில் இளைஞா்கள் தீவிர பங்களிப்பை அளிக்கும்போது, நாடு விரைவான வளா்ச்சியை அடையும் என்பதோடு சா்வதேச அளவில் அங்கீகாரத்தையும் பெறும்.

நாட்டின் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகளை தொடா்ந்து அதிகரிக்கச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இளைஞா்களும் தங்களின் அா்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு திறன் மூலம் தேசத்தின் ஆற்றலை உலகுக்கு நிரூபித்து வருகின்றனா். தற்போது, மும்பையில் நடைபெறவிருக்கும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு மாநாடும் (வேவ்ஸ்), இளைஞா்களுக்கு தங்களின் திறமையை உலகுக்கு நிரூபிப்பதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றாா்.

மேலும், இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) இயக்கத்தை ஊக்குவிக்கவும், இளைஞா்கள் உலகத் தரத்திலான பொருள்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலும் மத்திய பட்ஜெட்டில் ‘உற்பத்தித் துறை இயக்கம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இத் திட்டம், நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்பதோடு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்’ என்றும் பிரதமா் கூறினாா்.

பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் செ... மேலும் பார்க்க

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 12 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மணிப்பூரில் ரோந்துப் பணியின்போது மூன்று மாவட்டங்களில் இ... மேலும் பார்க்க

பிரச்னைகளைவிட பிரசாரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் பாஜக: சமாஜவாதி

பஹல்காம் தாக்குதலுக்கு, பாஜக அரசின் இயலாமைதான் காரணம் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, பாஜக அரசின் மீது குற்றம் சாட்டிய சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் ... மேலும் பார்க்க

உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் காரில் இருந்து இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மௌரானிபூர் வட்ட அதிகாரி ராம்வீர் சிங் கூறுகையில், கஜுராஹோ சாலையில் உள்ள பரியாபைர் க... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது

வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஆப்கனில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற 41 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், வடக்கு வஜீரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் பிபக் கர் பகுதிக்கு அருகே வெள்ளிக்க... மேலும் பார்க்க