செய்திகள் :

"ஒவ்வொரு முறையும் அவளை அழைக்கும் போது..." - குழந்தைக்கு 'சிந்தூரி' எனப் பெயரிட்ட பீகார் தம்பதி

post image

பீகாரைச் சேர்ந்த தம்பதி தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து 'சிந்தூரி’ என்று பெயரிட்டுள்ளார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று அதிகாலை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை (Operation Sindoor) நடத்தியது. இது கடந்த ஏப்ரல் மாதம் 22 தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியாகும்.

Operation Sindoor
Operation Sindoor

இந்திய ராணுவத்தின் இந்தச் செயலுக்கு நாட்டு மக்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தேசபக்தி ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு 'சிந்துரி' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த பெயர் ஆபரேஷன் சிந்தூரின் பெயரிலிருந்து எடுத்து வைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் கதிஹார் நகரத்தின் பால்தி மகேஷ்பூர் கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ் மண்டல் மற்றும் ராக்கி குமாரி தம்பதிக்கு அங்கு உள்ள மருத்துவமனையில் மே 7 ஆம் தேதி காலை 9 மணிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மே7 ஆம் தேதி தான் இந்திய ராணுவத்தால் ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

தேசபக்தி காரணமாக அந்த தம்பதியினர் அந்தக் குழந்தைக்கு ”சிந்தூரி” எனப் பெயரிட்டுள்ளனர்.

இது குறித்து பெண் குழந்தையின் தாத்தா குந்தன் மண்டல் ”தி பிரிண்ட்” ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தப் பெயரால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாங்கள் ஒவ்வொரு முறையும் அவளுடைய பெயரைச் சொல்லும்போது, ​​இந்தியா, பாகிஸ்தானுக்குக் கொடுத்த பதிலடி செய்தியை நினைவுபடுத்துவோம்.

சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள்” என மகிழ்ச்சி பொங்கக் கூறியிருக்கிறார்.

இதேபோல் கொரோனா தொற்று காலத்தில் சத்தீஸ்கரில் ஒரு தம்பதி தங்களுக்குப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்குக் கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் அவர்களின் ஆண் குழந்தைக்கு ”லாக் டவுன் யாதவ்” என்றும் பெயரிட்டனர். இந்த வரிசையில் பீகாரில் உள்ள இந்த தம்பதியினர் இந்திய ராணுவத்தைப் போற்றும் வகையில் ”சிந்தூரி” எனப் பெயரிட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

இந்தியாவின் பதில் தாக்குதல் எதிரொலி; பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் பிரதமர்?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதற்கு எதிர்வினையாற்று விதமாக மே 7 ஆம் தேதி அதிகாலை பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிக... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் முக்கிய இடங்களைக் குறிவைக்கும் இந்தியா; ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த பாகிஸ்தான்?

இஸ்லாமாபாத், லாகூர், சியால்கோட் ஆகிய முக்கிய நகரங்களில் இந்தியா பதில் தாக்குதலை நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் பாகிஸ்தான் அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மே7 ஆம் ... மேலும் பார்க்க

விமானத்தில் 3 வயது குழந்தைக்கு பரிமாறப்பட்ட ஒயின்; மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம் - என்ன நடந்தது?

விமானத்தில் பயணித்த மூன்று வயது சிறுவனுக்கு விமான பணிப்பெண் ஒருவர் தவறுதலாக ஒயின் வழங்கியதை அடுத்து அந்த விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.ஷாங்காயில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானத்தின் வணிக வகுப்... மேலும் பார்க்க

AI: மென்பொருள் கோளாறால் நிகழ்ந்த விபரீதம்; மனிதர்களை தாக்க முயன்ற ரோபோ - இணையத்தில் வைரலாகும் வீடியோ

AI (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகையே தன் வசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. சாதாரண புகைப்படம் எடுப்பதில் துவங்கி, உயிரைக் காக்கும் மருத்துவத்துறை வரை செய... மேலும் பார்க்க

`பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் இல்லையா?’ - நெறியாளர் கேள்விகள்; நேரலையில் திணறிய பாக்., அமைச்சர்

பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் சிந்தூர்” எனும் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 9 இலக்குகள் குறைவைத்து தாக்கப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்தது. இந்த நிலையில... மேலும் பார்க்க

Operation sindoor: இந்தியா ”ஆப்ரேஷன் சிந்தூர்" நடத்திய பின் பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடியது என்ன?

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வ... மேலும் பார்க்க