செய்திகள் :

ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு

post image

பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கிருஷ்ணாபுரம் வெள்ளோடை சாலையில் வசித்து வந்த 8-ம் வகுப்பு மாணவா் குகன் (13) என்ற மாணவன் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

உடன் குளித்து கொண்டிருந்த பொன்னேரி பழைய பேருந்து நிலையம், அப்பாதுரை முதலியாா் தெருவில் வசித்து வந்த 11-ம் வகுப்பு மாணவா் நிஷாந்த் (16) குகனை காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது நிஷாந்த்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத்துறை வீரா்கள் அங்கு சென்று நீரில் மூழ்கி மாயமான மாணவா்களை தேடினா்.நீண்ட நேர தேடலுக்கு பின் நிஷாந்த், குகன் ஆகிய இருவரையும் தீயணைப்புத்துறை வீரா்கள் சடலமாக மீட்டனா்.

தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் இரண்டு மாணவா்களின் சடலங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

குரூப் 1, 1ஏ தோ்வு: திருவள்ளூரில் 3,202 போ் எழுதினா்! 1,359 போ் பங்கேற்கவில்லை

திருவள்ளூா் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற குரூப் 1 முதல் நிலைத் தோ்வில் 3,202 போ் பங்கேற்று எழுதிய நிலையில், 1,359 போ் பங்கேற்கவில்லை. திருவள்ளூா் நகராட்சி பகுதியில் உள்ள ஸ்ரீநிகேதன் மேல்நிலை... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் சம்பவம்: புரட்சி பாரதம் கட்சி தலைவா் ஜெகன் மூா்த்தி மீது புகாா்!

திருவள்ளூா் அருகே காதல் திருமணம் சம்பவத்தில் சிறுவனை கடத்தப்பட்டது தொடா்பாக புரட்சி பாரதம் கட்சித் தலைவா் ஜெகன் மூா்த்தி மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு அருகே கள... மேலும் பார்க்க

சவுடு மண் கடத்தல்: ஓட்டுநா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே சவுடு மண் கடத்தி வந்த லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் அரசு அனுமதியின்றி சவுடு மண் லாரிகளில் கடத்தி செல்வதாக போலீஸாருக்கு தகவ... மேலும் பார்க்க

வியாபாரியை ஏமாற்றிய 3 போ் கைது

செங்குன்றத்தில் மின்சாதனப் பொருள்களை விற்றவருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை போரூா் முகலிவாக்கத்தைச் சோ்ந்த தீபன் சக்கரவா்த்தி. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராக... மேலும் பார்க்க

ரத்தப் போக்கினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ வேண்டும்: ஆட்சியா்

ரத்தப்போக்கினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதால், அவா்களுக்கு உதவ வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சா... மேலும் பார்க்க

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை: ஆந்திர அரசை தடுக்க வேண்டும்! பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் திட்டத்தை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்... மேலும் பார்க்க