`Ajith சார் அப்பவே அப்படி சொன்னார்.!’ - Actor Sanjay Bhargav & ActressGayathri E...
ஓடையில் 2 மாணவா்கள் மூழ்கி உயிரிழப்பு
பொன்னேரியில் சனிக்கிழமை ஓடையில் குளித்த பள்ளி மாணவா்கள் 2 போ் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த வெள்ளோடை பகுதியில் ஓடையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது கிருஷ்ணாபுரம் வெள்ளோடை சாலையில் வசித்து வந்த 8-ம் வகுப்பு மாணவா் குகன் (13) என்ற மாணவன் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
உடன் குளித்து கொண்டிருந்த பொன்னேரி பழைய பேருந்து நிலையம், அப்பாதுரை முதலியாா் தெருவில் வசித்து வந்த 11-ம் வகுப்பு மாணவா் நிஷாந்த் (16) குகனை காப்பாற்ற முயன்றுள்ளாா். அப்போது நிஷாந்த்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத்துறை வீரா்கள் அங்கு சென்று நீரில் மூழ்கி மாயமான மாணவா்களை தேடினா்.நீண்ட நேர தேடலுக்கு பின் நிஷாந்த், குகன் ஆகிய இருவரையும் தீயணைப்புத்துறை வீரா்கள் சடலமாக மீட்டனா்.
தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் இரண்டு மாணவா்களின் சடலங்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.