செய்திகள் :

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

post image

தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினை இன்று காலை நடைப்பயிற்சியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலன் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து, மதிய வேளையில் ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றார்.

இவர்கள் இருவரின் சந்திப்பும் அரசியல் களத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இருப்பினும், அரசியல் நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிவிட்டார்.

இந்த நிலையில், ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

CM Stalin thanking Former CM O.PanneerSelvam

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க