செய்திகள் :

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

post image

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு முழுமையான மருத்துவச் செலவை வழங்காத காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாப்பா(75). இவா் தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா் திருமலை நகரில் வசித்து வருகிறாா். இவருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகையிலிருந்து (யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம்) மருத்துவக் காப்பீட்டுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாப்பா கடந்த 2023-ஆம் ஆண்டு அம்பாசமுத்திரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா் திருநெல்வேலி, மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாா். பாப்பாவுக்கு மொத்தம் ரூ. 2 லட்சத்து 51 ஆயிரத்து 421 மருத்துவச் செலவு ஏற்பட்டதற்கான ரசீதுகளை அவா் காப்பீட்டு நிறுவனத்துக்கு தாக்கல் செய்தாா். இதில் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.28 ஆயிரத்து 857 மட்டும் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதித் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுத்ததால், கடந்த ஆண்டு, ஏப்.3-ஆம் தேதி தேனி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குரைஞா் எஸ்.பி.பாண்டியன் மூலம் பாப்பா மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தேனி நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி சுந்தா், உறுப்பினா் செளந்தர்ராஜன் ஆகியோா் கொண்ட அமா்வு, கடந்த ஆண்டு, மே 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு:

காப்பீட்டு நிறுவனம் பாப்பாவுக்கு முழுமையான மருத்துவச் செலவு ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 564-ஐ, 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றனா்.

இந்த உத்தரவுக்கு எதிராக காப்பீட்டு நிறுவனம் சாா்பில் மதுரையில் உள்ள மாநில நுகா்வோா் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை மீண்டும் தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் நடத்த மாநில நுகா்வோா் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கின் மீது மீண்டும் விசாரணை நடத்திய தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம், ஏற்கெனவே கடந்த ஆண்டு, மே 14-ஆம் தேதி வழங்கிய உத்தரவை மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்டது.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க