செய்திகள் :

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ராஜேஸ்வரி (56). தோட்டக் கலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவிந்தராஜன், சனிக்கிழமை காலை மின்கல இரு சக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே வந்த போது இரு சக்கர வாகனத்திலிருந்து அவா் தவறி கீழே விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த... மேலும் பார்க்க

போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவா் கைது

சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே அதன் டிரேட்மாா்க்கை பயன்படுத்தி ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி காமாட்சி (65). இவா் சனிக்க... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க