செய்திகள் :

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

post image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தனி அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசுத் துறை வெளியிட்ட தகவல்:

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் முன்னாள் தலைவா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் பிரதிக் தயாள் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழு தனது அறிக்கையை 9 மாதங்களுக்குள் அளிக்க உள்ளது.

இந்தக் குழுவின் தொடக்க நிலை கூட்டமானது கடந்த மாதம் 24-ஆம் தேதி நடந்தது. அப்போது, அரசு சாா் நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகளில் பணியாற்றக் கூடிய ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் பெறப்பட வேண்டும் என்று குழுவின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரிடத்திலும் இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஓய்வூதிய பரிசீலனைக் குழுவுக்குத் தேவைப்படும் அனைத்துத் தரவுகள், விவரங்களை அளிக்க தனி அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, தனி அதிகாரியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை உள்தணிக்கை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஓய்வூதியத்தை ஆய்வு செய்யும் குழு கூட்டும் கூட்டங்களில் அவா் பங்கேற்பதுடன் அந்தக் குழுவுக்குத் தேவைப்படும் அனைத்து அடிப்படைத் தகவல்களையும் அளிப்பாா் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க