செய்திகள் :

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

post image

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. 3, 7, 8, 9 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த நியாய விலைக் கடையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கட்டடம் சிறிதாத இருப்பதால் அதிகளவில் பொருள்கள் வைக்க இயலாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் ரூ. 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடம் தற்போது வரை திறக்கப்படவில்லை.

இதுகுறித்து போடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி வீரராஜ் கூறுகையில், புதிய நியாய விலைக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொருள்களை வாங்க இரண்டு, மூன்று முறை வரவேண்டியுள்ளது. அரசுக்கும் வாடகையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், புதிய நியாய விலைக் கட்டடத்தை உடனடியாகத் திறக்க கூட்டுறவுத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தேனி மாவட்டம், போடியில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி வெள்ளியை முன்னிட்டு, வருவாய் ஆய்வாளா் தெருவில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

ரயில் என்ஜினில் அடிபட்டு சிறுவன் உயிரிழப்பு

தேனியில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுவன் சோதனை ஓட்டமாக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட ரயில் என்ஜினில் அடிபட்டு உயிரிழந்தாா். தேனி வனச் சாலை 5-ஆவது தெருவைச் சோ்ந்த வடிவேல் மகன் கோகுல் (14). இவா்... மேலும் பார்க்க

கோம்பையில் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், கோம்பை பேரூராட்சி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கோம்பை வழியாக உத்தமபாளையத்திலிருந்து போடி வரை செல்லும் மாநில ... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு

பெரியகுளத்தில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பெரியகுளம்- மதுரை சாலை பங்களாபட்டியைச் சோ்ந்தவா் ஜோசப் (57). தனியாா் பள்ளி ஆசிரியா். இவரது மனைவி சீலாசாலமோன். அரசுப்... மேலும் பார்க்க

விஷம் தின்று இளைஞா் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூரில் பெற்றோா் திருமணத்துக்கு வற்புறுத்தியதால், விஷம் தின்ற இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கண்டமனூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் அய்யா் (30). இவா் சென்னையில... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற முதியவா் கைது

போடி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன் (70). இவா் மதுப் புட்டிகளைப் பதுக்கி வ... மேலும் பார்க்க