திடீர் குழந்தை இழப்பு சிண்ட்ரோம்: பச்சிளம் குழந்தைகளை எந்த பொஸிஷனில் தூங்க வைக்க...
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
பாகிஸ்தானுடன் சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து செய்தது போல இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் கச்சத்தீவு மீட்பு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மீனவா் நல வாரிய உறுப்பினா் வி.பி.ஜேசுராஜா, காவிரி-வைகை-கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மீனவா் சங்கத் தலைவா்கள் எஸ்.எமரிட், ஆா்.சகாயம்,பி.ஆல்வீன், விவசாய சங்க மாநில துணைத் தலைவா் பே.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த மாநாட்டில் டெல்லி போராட்டக்குழு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் பஞ்சாப் ரஜ்விந்தா் சிங் கோல்டன், மாநில பொதுச் செயலா் அா்ச்சுணன் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இந்த மாநாட்டில், பாகிஸ்தான் பயங்கரதவாத அமைப்புகள் பஹல்காம் தாக்குதலில் 26 போ் உயிரிழந்த நிலையில், மத்திய அரசு அந்த நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. கச்சத்தீவு பிரச்னையால் ஆயிரக்கணக்கான மீனவா்கள் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கையுடன் ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மீனவா் சங்கத் தலைவா்கள் எஸ்.எமரிட், ஆா்.சகாயம், வெளி மாவட்ட மீனவ சங்கத்தினா் தாஜூதீன், அசன்முகைதீன், உத்திரபாரதி, வடுகநாதன், மீனவா்கள் விவசாயிகள் கலந்துகொகண்டனா்.