செய்திகள் :

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

post image

நமது நிருபர்

கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் மனுதாரரான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு பதிலாக திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலுவை சேர்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் வகையில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கச்சத்தீவை மீட்கக் கோரி அதிமுக பொதுச் செயலராக இருந்த மறைந்த ஜெயலலிதா, ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான முன்னாள் முதல்வர் கருணாநிதி தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, "கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்க 1974, ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும், மார்ச் 23, 1976 அன்று செய்யப்பட்ட மற்றொரு ஒப்பந்தமும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மற்றும் இந்த ஒப்பந்தங்கள் கேள்விக்குரியவை' என்றார்.

மேலும், மனுதாரரான மறைந்த மு.கருணாநிதிக்குப் பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்ஜ். இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கின் இறுதி விசாரணையை செப்.15-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

மியூச்சுவல் ஃபண்டு: அதிகரிக்கும் பெண் முதலீட்டாளர்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.முந்தைய தலைமுறையினரைவிட, தற்போதைய தலைமுறையினர் நிதி மேம்பாடு விவகாரத்தில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் பங்குச்... மேலும் பார்க்க

குழந்தைக்காக முதியவரின் தலை துண்டித்து கொலை

பிகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி, முதியவரின் தலையைத் துண்டித்து கொலை செய்த மாந்திரீகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பிகாரில் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் யுக்வல் யாதவ் (65) என்பவர் காணாமல் போய்வ... மேலும் பார்க்க

மியான்மரில் நிலநடுக்கம்: தாயகம் திரும்பிய இந்திய பயணிகள்!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் இருந்து இந்திய பயணிகள் தாயகம் திரும்பினர். மியான்மர் மட்டுமல்லாது தாய்லாந்து, வியட்நாம், சீனாவிலும் உணரப்பட்ட நில அதிர்வுகளால் ம... மேலும் பார்க்க

ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!

ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்த... மேலும் பார்க்க

மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.

மறைந்த முன்னாள் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராக்புத் தற்கொலை வழக்கில், அவரது தோழி ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பிருப்பதாக ஜீ செய்திகள் நிறுவனம் குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புகோரி, ஜீ செய்திகள் நிறுவனத... மேலும் பார்க்க

ஆயுதங்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது: அமித் ஷா

ஆயுதங்களை ஏந்தி வன்முறையில் ஈடுபடுபவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்றும் அமைதி, வளர்ச்சி மட்டுமே நல்ல மாற்றமாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கரின் சு... மேலும் பார்க்க