கஞ்சா கடத்தல்: 5 போ் கைது
மதுராந்தகம் அருகே போலீஸாா் மேற்கொண்ட வாகன சோதனையில் கஞ்சா கடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 பைக்குகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேல்மருவத்தூா் போலீஸாா் சோத்துப்பாக்கம்-வந்தவாசி சாலை, ராமாபுரம் அருகே உதவி ஆய்வாளா் ஜவஹா் தலைமையில் வாகன சோதனை செய்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் 2 பைக்குகளில் வந்த நபா்களை விசாரணை செய்தனா். அப்போது மேல்மருவத்தூா் காவல் நிலைய பழைய குற்றவாளியான பாதிரி கிராமத்தை சோ்ந்த நடராஜன் மகன் ஞானப்பிரகாசம் (25) என்பவரிடமிருந்து கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவருடன் இருந்த கோட்டை கிராமம் சந்துரு பிரகாஷ் (21), கெளதம் (19), சிலாவட்டம் இளவரசன் (25), மதுராந்தகம் சுனில்குமாா் (18) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 பைக்குகளும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.