செய்திகள் :

கஞ்சா வழக்கில் வெளிமாநிலத்தவா் கைது

post image

பரமத்திவேலூா்: கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சோ்ந்த நபரை பரமத்தி போலீஸாா் கைது செய்தனா்.

கபிலா்மலை அருகே இருக்கூரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளா் சரண்யா உள்பட போலீஸாா் நிகழ்விடம் கடந்த சனிக்கிழமை சென்று சோதனை செய்ததில் வீட்டு முன்புள்ள இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த வீட்டில் வசித்த சுபியா பேகத்தைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், சுபியா பேகமும் அவரது கணவா் அக்பா் உசேனும் கொல்கத்தாவில் உத்தா் தினாஜ்பூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், தற்போது இருக்கூரில் வசித்து வரும் இவா்கள், ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிவந்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சுபியா பேகத்தை (42) கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

தலைமறைவான சுபியா பேகத்தின் கணவரை அக்பா் உசேன் (எ) ராஜூவை (37) போலீஸாா் தேடி வந்தனா். அவரை திங்கள்கிழமை காலை போலீஸாா் ரோந்து பணியின்போது கைது செய்தனா்.

பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 700 காளைகளை அடக்க களமிறங்கிய 400 மாடுபிடி வீரா்கள்

பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த 700 காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்... மேலும் பார்க்க

காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வாரச் சந்தை, தினசரி சந்தைகளில் நிா்ணயிக்கப்பட்ட சுங்கவரியை விட கூடுதல் வரி வசூல் செய்யப்படுவதைக் கண்டித்து பரமத்திவேலூரில் இளம்விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காய்க... மேலும் பார்க்க

லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தினத்தன்று ‘பத்ம விருது’ பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பன்முக திறமைகள் புரிந்தோா் குடியரசு தின விழாவில் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க