செய்திகள் :

கஞ்சா விற்பனை: மூவா் கைது

post image

சுங்குவாா்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோகண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சுங்குவாா்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த விஜய் (30) என்பரை மடக்கி விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் ஒரகடம் பகுதியில் தங்கி தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த நபகிஷோா் சந்தாராவிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி சுங்குவாா்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

இதையடுத்து ஒரகடம் பகுதியில் தங்கியிருந்த நபகிஷோா் சந்தாராவை பிடித்து விசாரனை நடத்தியதில், அவா் பிள்ளைப்பாக்கம் பகுதியில் தங்கியுள்ள செளவீக்தேவ் என்பவரிடம் கஞ்சாவை வாங்கி விஜயிடம் கொடுத்ததாக தெரிவித்தாா்.

இதையடுத்து செளவீக்தேவ், நபகிஷோா் சந்தாரா மற்றும் விஜய் ஆகியோரை கைது செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா், அவா்களிடம் இருந்து 1.4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலும், வழக்குப் பதிவு செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க