2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்
கடந்தகால விமான விபத்துகளில் தப்பி வந்த அதிசயப் பிறவிகள்!
பொதுவாக விமான விபத்துகள் நேரிடும்போது, பலி எண்ணிக்கைக் கடுமையாக இருக்கக் காரணம், உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பதே.
உயரத்திலிருந்து விழுவது, எரிபொருளால் வெடித்துக் சிதறுவது, விபத்து என்றாலே பயங்கர சேதம் போன்றவற்றால் பலி எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக கடந்தகால விமான விபத்துகளில் கூட ஒரு சிலர் அதிசயமாக தப்பி வந்திருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விமான விபத்தில், 241 பேர் பலியாக, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், மட்டும் உயிர் தப்பியிருக்கிறார். அதுவும் லேசான காயங்களுடன்.
இதுபோல கடந்த காலங்களிலும், விமான விபத்துகளின்போது அனைவரும் உயிரிழந்துவிட ஒரு சிலர் மட்டும் உயிர் பிழைத்த சம்பவங்களும் நடந்துள்ளன. அந்த வகையில் இதுவரை 7 பேர் அவ்வாறு உயிர்பிழைத்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.