செய்திகள் :

கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்

post image

சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் குற்றங்களை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இந்த ஆண்டும் கொலை வழக்குகள் குறைந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 483 கொலை வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரெளடிகளை கட்டுப்படுத்தும் வகையில், அவா்கள் மீதான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்படுகிறது. மேலும், நீதிமன்றத்,தில் ரெளடிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 150 ரெளடிகளுக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகமாகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் பழிக்குப்பழியாக 22 போ் கொலை செய்யப்பட்டனா்.

பழிக்குப் பழி கொலைகள்: இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் பழிக்குப் பழியாக 18 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதற்கு போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம். போலீஸாரின் கடும் நடவடிக்கையால் 326 கொலைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், கடந்த நான்கு மாதங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 1,325 ரெளடிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், பழிவாங்கும் சம்பவங்கள், கொலைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறையில் உள்ள ரெளடிகள் உள்பட சந்தேக நபா்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவித்துள்ளாா் சங்கா் ஜிவால்.

காவல் துறைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

ஈரோடு, திருப்பூர் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் துறையினரை நேரில... மேலும் பார்க்க

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க