செய்திகள் :

கடன் பிரச்னை: விஷம் அருந்திய தந்தை உயிரிழப்பு, மகனுக்கு தீவிர சிகிச்சை

post image

திருப்பத்தூா் அருகே கடன் பிரச்னையால் தந்தை, மகன் விஷம் அருந்தியதில் தந்தை உயிரிழந்தாா். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கசிநாயக்கன்பட்டி அடுத்த வக்கீல் அய்யா் தோப்பு காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (65). கட்டட தொழிலாளி. இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இவரது மகன் சுரேஷ்(30). இவா் லாரி தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி, வீடு, நிலம் ஆகியவற்றை விற்று கடன் அடைத்துள்ளனா்.

அதையடுத்து வீட்டினை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மனமுடைந்த ராமன், சுரேஷ் ஆகியோா் வீட்டில் வைத்து விஷம் அருந்தி உள்ளனா்.

இதில் ராமன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினா் சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க

பயனாளிகளுக்கு காப்பீடு திட்ட அட்டை

மாதனூா், தோட்டாளம் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சி. சுரேஷ்குமாா், ஊரா... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை

துத்திப்பட்டு ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்து 12 வாா்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்களுக... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் இயக்கம்

திருப்பத்தூா் அருகே நிறுத்தப்பட்ட பேருந்து சேவையை எம்எல்ஏ அ.நல்லதம்பி மீண்டும் இயக்கி வைத்தாா்.திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் பணிமனை வாயிலாக இயக்கப்பட்டு வரும் திருப்பத்தூா் முதல் சிம்மணபுதூா்... மேலும் பார்க்க

சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி

ஆம்பூரில் சாலைத் தடுப்பில் மோதி லாரி விபத்துக்குள்ளானது.பெங்களூருவிலிருந்து இருசக்கர வாகன உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு சென்ற லாரி சான்றோா்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்... மேலும் பார்க்க