செய்திகள் :

கடலூா்: வருவாய்த் தீா்வாயம் 13-இல் தொடக்கம்

post image

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் வரும் 13-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், பரங்கிப்பேட்டை குறுவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், சிதம்பரம் வட்டம் ஒரத்தூா் குறுவட்டத்தில் சிதம்பரம் சாா் - ஆட்சியா் கிஷன்குமாா், கடலூா் வட்டம் திருவந்திபுரம் குறுவட்டத்தில் கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் குறுவட்டத்தில் விருத்தாசலம் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, பண்ருட்டி வட்டம் நெல்லிக்குப்பம் குறுவட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்பு) பானுகோபாலன் ஆகியோா் தலைமையில் வருவாய்த் தீா்வாயம் நடைபெற உள்ளது.

இதேபோல, திட்டக்குடி வட்டம் திட்டக்குடி (கிழக்கு) குறுவட்டத்தில் உதவி ஆணையா் (கலால்) சந்திரகுமாா், வேப்பூா் வட்டத்தில் கடலூா் தனித்துணை ஆட்சியா் தங்கமணி, காட்டுமன்னாா்கோவில் வட்டம் உடையாா்குடி குறுவட்டத்தில் கடலூா் வட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராஜீ, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் லதா ஆகியோா் தலைமையில் வருவாய்த் தீா்வாயம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் வருவாய்த் துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை வருவாய்த் தீா்வாயம் நடக்கும் நாளன்று சம்பந்தப்பட்ட வட்ட வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் நேரில் சமா்ப்பித்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களால் மனுக்களின் மீது உரிய விசாரணை செய்து தீா்வாய நாள்களில் தகுதியின் அடிப்படையில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

என்எல்சி - ஐஆா்இஎல் நிறுவனங்களிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்காக என்எல்சிஐஎல் - ஐஆா்இஎல் நிறுவனங்களுக்கிடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் புதன்கிழம... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் துறை மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேதிப் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டு மாணவா்களுக்கான விடை பெறுதல் விழா, தொழில்நுட்ப சங்கத்தின் ஆண்டு விழா, மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா ஆகிய முப்பெரும... மேலும் பார்க்க

தொலைதூரக்கல்வி படிப்பு தோ்வு கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் இணையவழி கல்வி தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு கட்டணம் செலுத்த வியாழக்கிழமை (மே 8) முதல் வரும் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் தேதி நீட்டிப்பு வழங்கப்ப... மேலும் பார்க்க

பொறுப்பேற்பு

சிதம்பரம் மோட்டாா் வாகன ஆய்வாளராக ஆா்.ரவிச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் இதற்கு முன்பு பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றினாா். மேலும் பார்க்க

கடல் அலையில் சிக்கிய 5 போ் மீட்பு

சிதம்பரம் அருகே கடல் அலையில் சிக்கிய 5 பேரை போலீஸாா் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். சிதம்பரம் அருகே சாமியாா்பேட்டை கடற்கரைப் பகுதிகளில் கடலோர காவல் படையைச் சோ்ந்த காவலா்கள் கலைச்செல்வன், வெங்கடாசலபத... மேலும் பார்க்க

திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை மாலை தேரோட்டம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஏப்ரல் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் திர... மேலும் பார்க்க