செய்திகள் :

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா்.

கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, கோயில் அருகே புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 817 காளைகள் பங்கேற்றன. கோயிலில் பூஜைகள் முடிந்து, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும், முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா். சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

பின்னா், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், மின்விசிறி, சில்வா் அண்டா, மிதிவண்டி, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், அதிக காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 35 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கு முகாமிட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்தனா்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இது... மேலும் பார்க்க

அழகப்பா அரசு கலைக் கல்லூரி இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவிருப்பதாக கல்லூரியின் முதல்வா... மேலும் பார்க்க

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை ... மேலும் பார்க்க

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தல... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கை நகராட்சியில் ரூ.1.54 கோடியில் புதிய மின் மயானம்

சிவகங்கை நகராட்சியில் கூடுதலாக ரூ.1.54 கோடியில் புதிய மின்மயானம் அமைக்க தமிழக அரசு அனுமதித்ததற்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகராட்சி அலுவலகக் கூட்... மேலும் பார்க்க