கஞ்சா விற்ற இளைஞா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது அருகேயுள்ள டி. பழையூா் பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் மகன் அருண் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.