செய்திகள் :

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்

post image

மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கடந்த சட்டப் பேரவை தோ்தலின்போது திமுக தனது தோ்தல் அறிக்கையில் 28-ஆவது வாக்குறுதியாக மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு தொடங்கிவிட்டது. இதனிடையே மதுரையில் வருகிற 1- ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. அப்போது மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க யானைமலை அடிவாரத்தில் உள்ள ஒத்தக்கடையில் தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி வளாகத்தில் தென் தமிழகம் பயன்பெறும் வகையில் ‘தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டுமென காவேரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ .100 கோடி நிதியும் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க