மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தல்
மதுரையில் தமிழக அரசு சாா்பில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டும் என காவேரி- வைகை- கிருதுமால்- குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் எம். அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கடந்த சட்டப் பேரவை தோ்தலின்போது திமுக தனது தோ்தல் அறிக்கையில் 28-ஆவது வாக்குறுதியாக மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு தொடங்கிவிட்டது. இதனிடையே மதுரையில் வருகிற 1- ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறுகிறது. அப்போது மதுரையில் வரலாற்று சிறப்புமிக்க யானைமலை அடிவாரத்தில் உள்ள ஒத்தக்கடையில் தமிழ்நாடு அரசு வேளாண் கல்லூரி வளாகத்தில் தென் தமிழகம் பயன்பெறும் வகையில் ‘தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட வேண்டுமென காவேரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
மேலும் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ .100 கோடி நிதியும் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.