செய்திகள் :

தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினாா். இதில் தொலைக்காட்சி நகைச்சுவை பேச்சாளா் மதுரை முத்து, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியா் மனசுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் சிகரம் சதீஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு 90 சதவீததுக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கிப் பேசினா்.

விழாவில் அண்ணா பல்கலைக்கழக தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி கொடுத்த 25-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பரிசு தொகை, விருதுகள் வழங்கப்பட்டன. பிறகு மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் மகாலிங்க சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். புதுக்கோட்டை மன்னா் கல்லூரி பேராசிரியா் அய்யாவு வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் இயந்திரவியல் துறை முதன்மையா் செந்தாமரை நன்றி கூறினாா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க