ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
தனியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீராஜராஜன் பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் 15-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஸ்ரீராஜராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசினாா். இதில் தொலைக்காட்சி நகைச்சுவை பேச்சாளா் மதுரை முத்து, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியா் மனசுத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் சிகரம் சதீஷ்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு 90 சதவீததுக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை பாராட்டி பரிசு வழங்கிப் பேசினா்.
விழாவில் அண்ணா பல்கலைக்கழக தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி கொடுத்த 25-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பரிசு தொகை, விருதுகள் வழங்கப்பட்டன. பிறகு மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக கல்லூரியின் துணை முதல்வா் மகாலிங்க சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா். புதுக்கோட்டை மன்னா் கல்லூரி பேராசிரியா் அய்யாவு வாழ்த்திப் பேசினாா். கல்லூரியின் இயந்திரவியல் துறை முதன்மையா் செந்தாமரை நன்றி கூறினாா்.