அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
திருவிழா நடைபெறும் ஜூன் 17-ஆம் தேதி வரை 15 நாள்கள் சுவாமி காலை வேளைகளில் பல்லக்கில் வீதியுலாவும், இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும். 8- ஆம் நாளான 10-ஆம் தேதி காலையில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறாா். அன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். 9 ஆம் நாளான 11-ஆம் தேதி தேரோட்டம் நடை பெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு மேல் சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். 12- ஆம் நாளான 14 -ஆம் தேதி கோயில் அருகேயுள்ள குளத்தில் பகலில் தெப்பம் உத்ஸவமும், இரவு அலங்கார பங்களா தெப்ப உத்ஸவமும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச. விநாயவேல், பரம்பரை அறங்காவலா் ராம. முத்துமீனாட்சி, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.