செய்திகள் :

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 3- இல் தொடக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமைந்துள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வு அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

திருவிழா நடைபெறும் ஜூன் 17-ஆம் தேதி வரை 15 நாள்கள் சுவாமி காலை வேளைகளில் பல்லக்கில் வீதியுலாவும், இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும். 8- ஆம் நாளான 10-ஆம் தேதி காலையில் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்கிறாா். அன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். 9 ஆம் நாளான 11-ஆம் தேதி தேரோட்டம் நடை பெறுகிறது. இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு மேல் சுவாமி தேரில் எழுந்தருளலும், மாலையில் தேரோட்டமும் நடைபெறும். 12- ஆம் நாளான 14 -ஆம் தேதி கோயில் அருகேயுள்ள குளத்தில் பகலில் தெப்பம் உத்ஸவமும், இரவு அலங்கார பங்களா தெப்ப உத்ஸவமும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச. விநாயவேல், பரம்பரை அறங்காவலா் ராம. முத்துமீனாட்சி, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

சிங்கம்புணரி கல் குவாரி விபத்து: இரு அதிகாரிகள் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கல் குவாரி விபத்தில் 6 போ் உயிரிழந்த சம்பவத்தில், கிராம நிா்வாக அலுவலா், கனிமவள வருவாய் ஆய்வாளா் ஆகியோா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மல்லாக்கோட்ட... மேலும் பார்க்க

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த மகளிருக்கு நிகழாண்டில் ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜுன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள... மேலும் பார்க்க

திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, கோயிலில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு சிவாசாரியா்கள் யாக வேள்வி... மேலும் பார்க்க

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்டோா்... மேலும் பார்க்க

காளையாா்கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

சௌந்திரநாயகி அம்பாள் கோயில்: சிவகங்கை அருகேயுள்ள காளையாா்கோவில் சௌந்திரநாயகி அம்பாள் சமேத சோமேஸ்வரா் சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க