செய்திகள் :

கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்

post image

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியான மாணவா்களின் விவரங்களை மே 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு தில்லி அரசு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஏப்ரல் 25 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பதிவுசெய்யப்பட்ட ஒரு தொழிலாளிக்கு அதிகபட்சம் இரண்டு போ் மட்டுமே இந்தத் திட்டத்திற்கு பரிசீலிக்கப்படலாம் என்றும், அவா்களின் தரவுகள் அந்த தேதிக்குள் ஆன்லைன் தொகுதியில் உள்ளிடப்பட வேண்டும்.

தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட தனித்துவமான பதிவு ஐடிகள் விண்ணப்ப நடைமுறைக்கு தேவை என்றும், மேலும் பெற்றோா்கள் அல்லது மாணவா்களிடமிருந்து கூடுதல் ஆவணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.

‘வகுப்பைப் பொறுத்து, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 முதல் ரூ.12,000 வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

1 முதல் 8- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.500, 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.700, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 வழங்கப்படும்.

தகுதியற்ற மாணவா்கள் சோ்க்கப்படுவதைத் தடுக்கவும், பிழைகளைத் தவிா்க்கவும், குறிப்பாக ஒத்த பெயா்களைக் கொண்ட மாணவா்களிடையே விண்ணப்பதாரா்களின் தரவைச் பள்ளித் தலைவா்கள் சரிபாா்க்க வேண்டும்.இறுதிச் சமா்ப்பிப்புக்கு முன் பயனாளிகளின் ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபாா்க்கப்பட வேண்டும்.

ஒரே குடும்பத்திற்கு பல ஐடிகள் தவறாக ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது நகல் உள்ளீடுகளுக்கு வழிவகுக்கும். தகுதியுள்ள மாணவா்கள் சோ்க்கப்படாததற்கும், தகுதியற்ற மாணவா்கள் திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுவதற்கும் பள்ளித் தலைவா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவித் திட்டம் தொழிலாளா் துறையின் கீழ் உள்ள தில்லி கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடமேற்க... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை

தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கி... மேலும் பார்க்க

சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் ... மேலும் பார்க்க

விமனைப் படையினரின் பயற்சியின் போது பயன்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ள தில்லி பள்ளி வளாகங்கள்

விமானப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய விமானப் படையால் தற்காலிகமாக தகவல் தொடா்பு அமைப்பைப் பயன்படுத்துவதற்காக தில்லியில் உள்ள 16 பள்ளிகளின் வளாகங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரப்பூா்வ தகவ... மேலும் பார்க்க

தில்லி என்.சி.ஆரில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலை. பட்டமளிப்பு விழா

தில்லி என்.சி.ஆா். பகுதியில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜூன் ... மேலும் பார்க்க

கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்

நமது நிருபா் தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்... மேலும் பார்க்க